‘முகேஷ் நிறைய பேர் கூட உறவில் இருந்தார்’…கொடுமைகளை வேதனையுடன் சொன்ன சரிதா!

saritha about mukesh

கேரள : கர்ப்பமாக இருந்தபோது தன்னை முகேஷ் எட்டி உதைத்ததாக நடிகை சரிதா வேதனையுடன் தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார்.

பாலியல் வழக்கில் சிக்கிய முகேஷ்

பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான எம்.முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுத்துள்ள நிலையில், அவர் மீது ஐபிசி 376 சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியதாகப் பெண் நடிகை ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகேஷ் குறித்து சரிதா பகீர்

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை சரிதா தன்னுடைய முன்னாள் கணவர் முகேஷ் தனக்குக் கொடுத்த கொடுமைகளைப் பற்றி வேதனையுடன் பேசியுள்ளார். நடிகை சரிதா கடந்த 1988-ஆம் ஆண்டு நடிகர் முகேஷை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, சரிதா 2011-ஆம் ஆண்டு முகேஷை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமாக இருந்தபோது உதைத்தார்

முகேஷ் ஏற்படுத்திய கொடுமைகள் பற்றிப் பேசிய சரிதா ” நாங்கள் திருமணம் செய்து முடித்த பிறகு பிரிவதற்கு முக்கியமான காரணமாக அமைந்ததில் ஒரே ஒரு விஷயம் மறக்கவே முடியாத வகையில் நினைவில் இருக்கிறது. அது என்னவென்றால், நான் கர்ப்பமாக இருந்தபோது கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்கலாம் முகேஷ் என்னை எட்டி உதைத்தார்.

அவர் உதைத்ததை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வலி தாங்க முடியாமல் கீழே விழுந்துவிட்டேன். கீழே விழுந்து கண்கலங்கி அழுதும் கூட அவர் என் மீது இரக்கமே படவில்லை. அழுவதை பார்த்துகூட, நீ சினிமாவில் நல்ல நடிகை எனவே நீ நல்லா நடிக்கிறாய்” எனக் கூறியதாகவும் கண்ணீரை மறைத்துக்கொண்டு பேட்டியில் வேதனையுடன் சரிதா கூறினார்.

பலருடன் உறவில் இருந்தார்

நான் என்னுடைய வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஒரு நாள் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. சினிமாவில் இது போன்ற சம்பவங்களில் நடித்திருக்கிறேன். அது என்னுடய வாழ்க்கையில் நிஜமாக நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தாலே அந்த சமயம் வேதனை அளித்தது. நான் என்ன செய்யுறதுன்னு தெரிஞ்சு மீடியாகாரங்க சிலர் போன் பண்ணும் போது நான் அவங்களுக்கு மறுப்பு சொல்லிவிட்டேன்.

இந்தக் குடும்பப் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, முகேஷ்க்கு பல உறவுகள் இருந்தன. அது தவறு என்பதை உணர்ந்து திரும்பி வருவார் என்று தான் நம்பினேன். ஆனால், அப்படியான எந்த விஷயங்களும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கவில்லை” எனவும் சரிதா கூறினார்.

பிரச்னைகளை வெளிய சொல்லாத காரணம்?

இந்த பிரச்சனைகள் எல்லாம் போய்க்கொண்டிருந்த சமயத்தில்,முகேஷின் தந்தை என்னை ஒரு முறை சந்திக்க வந்தார். அப்போது, என்னுடைய மகன் முகேஷ் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை நானும் அதனைக் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், நான் உன்னிடம் கேட்டுக்கொள்வது ஒரே ஒரு விஷயம் தான். என்ன நடந்தாலும் எதையும் வெளியே சொல்லவேண்டாம்.

இதனை நான் கெஞ்சிக்கூட உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்” என முகேஷ் தந்தை கூறினாராம்.அந்த காரணத்துக்காக மட்டும் தான் சரிதா தனக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி அந்த சமயம் வாயைத் திறந்து பேசவில்லையாம். இதன் காரணமாகத் தான் முகேஷ் மீது போலீசில் கூட புகார் கொடுக்கவில்லை அவருடைய தந்தை இறந்த பிறகு தான் இந்த விஷயங்களை வெளியே சொல்கிறேன் எனவும் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி சரிதா பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்