ரியாஸ் கான் படுக்கைக்கு அழைத்தார்! பிரபல நடிகை பரபரப்பு புகார்!

revathy sampath about riyaz khan

சென்னை : நடிகர் ரியாஸ் கான் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஆர் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். குறிப்பாக, முதல் ஆளாக, மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பேட்டி ஒன்றில் பேசும்போது ” மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் பாலியல் ரீதியாக அணுகி உடலில் தொட்டதாக அவர் மீது புகார் கூறியிருந்தார்.

நடிகை அளித்த புகாரைத் தொடர்ந்து ரஞ்சித் தன்னுடைய அகாடமி தலைமை பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஸ்ரீலேகா மித்திராவை தொடர்ந்து சோனியா மல்ஹார் இளம் நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகக் கூறினார். அவருடைய குடும்பம் நலன் கருதி நடிகை சோனியா மல்ஹார் அந்த இளம் நடிகரின் பெயரை கூற மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து நடிகை ரேவதி சம்பத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துப் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நடிகர் ரியாஸ் கான் தன்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு படுக்கையறைக்கு அழைத்ததாக வெளிப்படையாகப் பேசினார்.

அது மட்டுமின்றி, இதற்கு விருப்பம் இல்லை என்றால் தன்னுடைய தோழிகளை இதற்குத் தயார் செய்து கொடுக்கும்படி ரியாஸ் கான் தொலைப்பேசியில் கூறியதாகவும் நடிகை ரேவதி சம்பத் கூறினார். ரியாஸ் கான் மீது இவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது சினிமா துறையில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மேலும், ரியாஸ் கானுக்கு முன்னதாக பிரபல நடிகரான சித்திக் மீதும் ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். நடிகை வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடிகர் சித்திக் நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்