சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினிக்கு இரண்டாவது குழந்தையா.? அதிர்ச்சியில் மீனா.!

Meena ,Rohini (1) (1)

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 24] கதை களத்தை இங்கே காணலாம்.

மனோஜ் கட்டில் இடித்து வலியுடன் இருக்கிறார். அப்போது முத்து  எந்த காலில அடிபட்டிச்சு அப்படின்னு கேக்குறாரு.. இதோ இந்த காலுடா  அப்படின்னு காலகட்டறாரு. உடனே முத்து அடுத்த காலில் மிதிக்கிறார்.. அப்பதான் வலி இரண்டு காலுக்கு ஒரே மாதிரி இருக்கும் அப்படின்னு நக்கலா சொல்றாரு.. இப்போ மீனா கிட்ட மீனா இந்த கட்டில முதல்ல மறைக்கணும் எல்லாரும் கண்ணும் இங்கதான் இருக்கு அப்படின்னு சொல்றாரு.  மீனாவும் ஆமாங்க கொசு தொல்லை தாங்க முடியல.. கரெக்டா சொன்ன மீனா ஒரு சின்ன கொசு .. ஒரு பெரிய கொசு..  அப்படின்னு சொல்றாரு.. உடனே பார்வதி விஜயா உங்களை தான் சொல்றான் இப்போ என்ன சொல்றது குள்ள வா உள்ள போயிடலாம்னு கூப்பிட்டு போறாங்க. இப்ப மீனா பூக்கடை அக்காவை பார்க்க போறாங்க .

அங்கே எல்லாரும் என்ன மீனா உன்  புருஷன் சமாதானம் ஆகிட்டாரா அப்படின்னு கேக்குறாங்க மீனாவும் ஆமாக்கா நான் வச்ச குழம்பு சாப்பிடுவதற்கு முன்னாடியே சமாதானம் ஆயிட்டாரு..  பரவால்ல மீனா நீ கொடுத்து வச்சவ அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனாவுக்கு சீதா கால் பண்ணுறாங்க அக்கா அஞ்சுமுலம்  பூ கொண்டுட்டு வா அக்கா அப்படின்னு சொல்றாங்க. உடனே மீனாவும் போறாங்க . அக்கா உனக்கு தினமும் அஞ்சு மொழம் பூ கொண்டு வந்துரு  இனிமேல் இது உனக்கு  ஆர்டர் . மீனா சந்தோஷப்படுறாங்க பரவால்ல சீதா உன்னை நினைச்சா பெருமையா இருக்குது அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி அந்த ஹாஸ்பிடலுக்கு செக்கப்  வந்திருக்கிறாங்க  சீதா பார்த்துறாங்க .அக்கா அங்கே பாரு .. விடு சீதா  ஏதாவது செக்கப் வந்து இருப்பாங்க நமக்கு எதுக்கு இதெல்லாம் அப்படின்னு சொல்றாங்க. இருக்கா நா கேட்டுட்டு வரேன் அப்படின்னு ரிசப்ஷனுக்கு போறாங்க.

Manoj,Rohini (4) (1)

அங்க ரிசப்சன்ல இவங்க இரண்டாவது குழந்தை செக்கப்புக்கு வந்துருக்காங்க அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்டு சீதா ஷாக் ஆகி மீனா கிட்ட சொல்றாங்க மீனா அதைவிட ஷாக் ஆயிறாங்க . அந்த அதிர்ச்சியிலேயே நீ யாருகிட்டயும் சொல்லிராத சித்தா அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்புறாங்க. அதே நினைப்பிலேயே போறாங்க மீனா. முத்து வாசல்ல சவாரிக்கு பேசிட்டு இருக்காரு அப்போ இரண்டாவது குழந்தையா அப்படின்னு பேசுறாரு. இதைக்கேட்டு மீனா எனது இரண்டாவது குழந்தையா அப்போ முதல் குழந்தை பிறந்து இருக்கும் இல்ல அப்படின்ற மாதிரி கேக்குறாங்க. என்ன மீனா எனக்கு பதிலா கட்டிங் போட்டுட்டு வந்துட்டியா சரி நீ போ நான் சவாரி முடிச்சுட்டு வரேன் அப்படின்னு சொல்றாரு. மீனா அப்படியே பிரம்ம புடிச்ச மாதிரி வீட்டுக்குள்ள போறாங்க .விஜயா கூப்பிடறது காதுல கூட வாங்கல .

எப்படி போற பாரு ஆடி அசைஞ்சு தேர்  மாதிரி அப்படின்னு சொல்றாங்க அது கூட அவங்க காதுல விழவே இல்ல .  ஏய் மீனா அந்த பேன போட்டுட்டு டீ போட்டு கொண்டு வா அப்படின்னு சொல்றாங்க .மீனா டிவியை போடுறாங்க டிவில ஒரு பொண்ணுக்கு டெலிவரி  ஆகுற மாதிரி சீன் ஓடிட்டு இருக்கு இதை பார்த்துட்டு அதிர்ச்சியா நின்னுட்டு இருக்காங்க. ஏய் மீனா என்னடி பண்ற டீ போட்டு கொண்டு வா . நீங்கதானே டிவி போட சொன்னீங்க.. நான் டீ தான் போட சொன்னேன் உனக்கு என்ன ஆச்சு வெயில்ல போயிட்டு வந்ததுல மண்டை குழம்பிருச்சா அப்படின்னு கேக்குறாங்க. இப்போ ரோகினையும் மனோஜூம் ஸ்வீட்டோட சந்தோசமா வராங்க. இத பார்த்த விஜயா என்ன ரெண்டு பேரும் முகத்திலயும்  சிரிப்பு பூத்துக் குலுங்குது.

Vijaya ,Rohini (1)

ரோகிணி உன் முகத்தை பார்க்கும் போதே எனக்கு தெரியுது அப்படின்னு சொல்லவும் ஐயோ ஆண்ட்டி நீங்க வேற எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க அப்படின்னு சொல்றாங்க. மனோஜ்  சொல்றாங்க அம்மா என்னோட கடையில இன்னைக்கு 15 டிவி சேல் ஆயிருக்கு. இது மாதிரி மாசத்துக்கு ரெண்டு டைம் சேலாச்சுனா போதும் நான் பெரிய ஆளா ஆயிடுவேன் அப்படின்னு சொல்றாங்க .இதுக்குத்தான் இவ்வளவு சந்தோசமா.. அப்படினு விஜயா சலிப்பா சொல்லுறாங்க . இந்த வீட்ல ஒரு குழந்தை ஓடி ஆட வேண்டாமா அப்படின்னு ரோகினி கிட்ட கேக்குறாங்க . அதோட இந்த எபிசோடு முடிந்தது.  ப்ரோமோல   முத்து கார்ல சவாரிக்கு கூட்டிட்டு போனவங்களுக்கு குழந்தை பிறந்தது அத பத்தி மீனா கிட்ட சொல்றாரு. மீனா அந்த குழந்தையை என் கையில கொடுத்தாங்க அந்த குழந்தை கண்ண மெதுவா திறந்து பார்த்துச்சா அப்படின்னு சந்தோசமா சொல்லிட்டு இருக்காரு.. மீனா முத்து கிட்ட ரோகிணியை பத்தி சொல்லுவாங்களா என்னன்னு பொறுத்திருந்து  பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்