வாழை படம் 2 முறை பார்த்து அழுதுட்டேன்! திவ்யா துரைசாமி எமோஷனல்!

Dhivya Duraisamy about vaazhai

சென்னை : வாழை படத்தைப் பார்த்து இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் ஆக23 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் விமர்சனங்களைத் தெரிவிப்பதற்கு முன்பே கண்கலங்கி  அழுதார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார்.

படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, நடிகர் சூரி, தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் கண்கலங்கி மாரி செல்வராஜைக் கட்டியணைத்துப் பாராட்டினார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகை திவ்யா துரைசாமி படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ” எனக்கு வாழை படம் மிகவும் முக்கியமான ஒரு படம். என்னுடைய சினிமா பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படம் என்று சொல்வேன்” எனப் பேசினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” வாழை படத்தை நானும் இரண்டு முறை பார்த்தேன். இரண்டு முறை பார்த்து ரொம்பவே அழுதேன். அதைப்போலப் படத்தில் எமோஷனலான காட்சிகள் எடுக்கும்போது படப்பிடிப்பு தளத்திலும் வைத்து எனக்குக் கண்ணீர் வந்தது. அந்த அளவுக்கு எமோஷனலான காட்சிகள் படத்தில் இருக்கிறது” என்றார்.

இந்த மாதிரி நல்ல படத்தைக் கொண்டாடத் தவறவேண்டாம் நல்ல விமர்சனங்களைக் கொடுக்கவேண்டும் எனவும் திவ்யா துரைசாமி கேட்டுக்கொண்டார். இது பற்றிப் பேசிய அவர் ” படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்குகளுக்கு வந்து பாருங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். படத்தில் எமோஷனலான காட்சிகள் இருக்கிறது. இந்த மாதிரி நல்ல படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கொடுத்து மக்களிடம் கொண்டு சேருங்கள்” எனவும் திவ்யா துரைசாமி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்