ஆனந்த கண்கலங்கிய விஜய்..! ‘தேம்பி அழுத புஸ்ஸி ஆனந்த்’.!

Emotional moment vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் போது கட்சி தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் அதனை சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட வடிவிழும் அந்த வாகைப் பூவின் இரு பக்கத்திலும் போர் யானைகள் இருந்தது.

கட்சிக்கொடி அறிமுகம் செய்த விஜய்க்கு ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விழாவில் கட்சிக்கொடி அறிமுகம் செய்தபோது கட்சி தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

விஜய் கண்ணீல் கண்ணீர் ததும்ப எமோஷனலாக பார்த்தார். மற்றோரு பக்கம் புஸ்ஸி ஆனந்த தேம்பி..தேம்பி அழுதார் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்