பரியேறும் பெருமாள் பிடிச்சவங்களுக்கு கர்ணன் பிடிக்காதது ஏன்? பா.ரஞ்சித் சொன்ன காரணம்!!

Pa Ranjith About karnan

சென்னை : எங்க படத்தை மோசமா விமர்சிக்கிறார்கள் எனவும், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சிலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பா.ரஞ்சித் பேசி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் வாழை படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், மிஷ்கின், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் பற்றியும், இயக்குனர் மாரி செல்வராஜை பற்றி பாராட்டி பேசினார்கள்.

அப்போது மேடையில் பேசிய பா.ரஞ்சித் ” மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல படம். அப்போ கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் எல்லாம் என்ன மொக்க படமா ?” என கோபத்துடன் கேள்வியை எழுப்பினர்.

மேலும் பேசிய அவர் ”  கர்ணன் மற்றும் மாமன்னன் படங்கள் ஏன் பிடிக்கவில்லை என்றால் அவன் திருப்பி அடிக்கிறான் என்பதற்க்காக தான்.  திருப்பி எதற்காக அடிக்கிறான் அங்கு என்ன பிரச்சனை நடக்கிறது? இந்த கேள்வியை நீ எப்போது உன்னிடம் கேட்டுக்கொள்வாய்? இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடாமல் ரொம்ப  மனதை துன்புறுத்தாமல் நெஞ்சை வருடி, நீ என்னை இப்படி கொடுமைப்படுத்திருக்க அதனால் நான் இவ்வளவு கவலைப் படுகிறேன் என்று சொல்வது மூலமாக நான் அந்த மாதிரி Comfort Zone-இல்  படம் எடுக்கணுமா?” என காட்டத்துடன் பேசினார்.

இவர் இப்படி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் என்பது போல அவர் பேச்சுக்கு எதிராக கண்டனங்களையும், மேலும் சிலர் அவர் பேசியது சரி தான் எனவும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விழாவில் தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித் ” வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் Troll பண்றாங்க. எவ்வளவு மோசமான வார்த்தைகளால் எங்கள் படத்தை விமர்சிக்க முடியுமோ அவ்வளவு விமர்சிக்கிறாங்க. ஆனால், சின்ன வயசுல இருந்தே பிரச்னைகளை பாத்து பாத்து வளர்ந்து வந்திருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்” எனவும் பா.ரஞ்சித் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்