தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

Lakshmipathy IAS - Ilam Bhagavad IAS

சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களை, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்து தமிழக புதிய தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலராக, முதலமைச்சரின் தனி செயலாளராக பொறுப்பிலிருந்த முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவதாஸ் மீனா ஐஏஎஸ், தற்போது ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்