ரூ.40 கோடி மதிப்பிளான டிபன் பாக்சில் திருடி தின்ற திருடர்கள்…!!!

Default Image

கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிச் சென்ற தங்க டிபன் கேரியர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.முபீம், கவுஸ் பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மியூசியத்தில் இருக்கும் தங்க தகடு பொருத்தப்பட்ட குரானையும் அவர்கள் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், அந்த டிபன் கேரியரை திருடிச் சென்றவர்கள், அதில் உணவு சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.

Image result for hyderabad nizam

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவிக்கையில், ` 2 கிலோ எடையுடைய இந்த தங்க டிபன் கேரியரின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். பழமையான பொருள் என்பதால் துபாய் சந்தையில் ரூ. 30 முதல் 40 கோடி வரை விலைபோகலாம்’ என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்