வெங்கட் பிரபுவின் நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் எப்படி இருக்கு?

NOVP

நண்பன் ஒருவன் வந்த பிறகு : இயக்குனர் அனந்த் ராம் இயக்கத்தில் மதன் கௌரி,பவனி ஸ்ப்ரே, பின்னி ஆலிவர்,வெங்கட் பிரபு, கஃய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. யூடியூப் மூலம் பிரபலமான பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்கியுள்ளார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இன்று படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த ஒருவர் ” மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, கருடன், மகாராஜாவுக்குப் பிறகு நண்பன் ஒருவன் வந்த பிறகு இந்த வருடம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். படத்தின் முதல் பாதி நம்மளுடைய வாழ்க்கையில் ஒற்றுபோகும். அதைப்போல படத்தின் இரண்டாவது பாதியை சொல்லவே வேண்டாம். இந்த ஆண்டு சிறந்த அறிமுக நடிகர் விருது மற்றும் சிறந்த இயக்குனர் விருது கண்டிப்பாக கிடைக்கும்” எனவும் கூறியுள்ளார்.

படத்தை பார்த்த மற்றோருவர் ” ஒரு கும்பல் மக்கள் பல நல்ல நாடக தருணங்களை வழங்கினர். படத்தில் ஆர்.ஜே. விஜய் மிகவும் அருமையாக நடித்துள்ளார். அனந்த் ராம்  ரைட்டிங் மூலம் முன்னணி மற்றும் இயக்குனராக சிறந்து விளங்கினார்.

மற்றோருவர் ” நண்பன் ஒருவன் வந்த பிறகு பொழுதுபோக்கு, உணர்ச்சி, ஊக்கம் மற்றும் ஆம் இது ஒரு முழுமையான தொகுப்பு. சூப்பர் ஹிட் கோ உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து மகிழுங்கள்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்