3 லட்சம் கொடுத்தால் வருவேன்.. கண்டிஷன் போட்ட நடிகையை விளாசிய தயாரிப்பாளர்!

Suresh Kamatchi

அபர்ணதி : ஜெயில், தேன், இருகபற்று போன்ற ஆஃப்பீட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை அபர்ணதி அடுத்து இயக்குனர் ஸ்ரீ வெற்றியின் “நாற்கரப்போர்” படத்தில் துப்புரவு பணியாளராக நடிக்கிறார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘நாற்கரப்போர்’ படக்குழுவினர் நேற்று (ஜூலை 30) சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது படத்தின் நாயகி அபர்ணதி, குழுவினருடன் மேடையில் காணப்படவில்லை.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மேடையில் ஏறி பேசியபோது, ​​படத்தின் புரமோஷன்களில் பங்கேற்காத அபர்னதியை அவர் கடுமையாக சாடினார். அபர்ணதியை புரமோஷனுக்கு அழைத்தால் ரூ. 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன், இல்லையெனில் வரமாட்டேன் என்றார்.

மேலும், தன்னுடன் மேடையில் யார் அமர வேண்டும் என்பதையும் அவரே முடிவு செய்ததால் எனக்குக் கோபம் வந்தது. தயாரிப்பாளர்களுக்குக் கஷ்டத்தை கொடுக்கும் அபர்ணதி போன்ற நடிகை தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லை. சினிமாவும், தமிழ் தயாரிப்பாளர்களும் வாழ வேண்டுமானால், இப்படிப்பட்டவர்கள் என்றென்றும் விலகி இருப்பது நல்லது என்று என்றார். மேலும், இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்