சிறகடிக்க ஆசை சீரியல்- கிரிஷ்க்கு டிரஸ் எடுக்கும் ரோஹினி.. விஜயாவிடம் மாட்டிக்கொண்டார்..!

vijaya Rohini

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 31] கதைக்களத்தை இங்கே காணலாம் .

மீனா பூக்கடைக்கு வராங்க அங்கே உள்ள பூக்கடை அக்கா  கிட்ட பேசிட்டு இருக்காங்க அப்ப அந்த அக்கா சொல்றாங்க நான் ஒரு ஆந்திராக்காரங்க வீட்டுக்கு பூ கொடுக்கலாம் என்று போனேன் . அவர்கள் எனக்கு பச்சைப்பயிறு தோசை செஞ்சு கொடுத்தாங்க. நான் அதை என் வீட்டுக்காரருக்கு செஞ்சு கொடுக்கலாம் என்று செஞ்சு கொடுத்தேன் ஆனா அவரு என்னைய பாராட்டவே இல்ல மிச்சத்தை நாய்க்கு போட்டேன் அந்த நாய் தின்னுட்டு வாலாட்டிட்டு போச்சு அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்ட பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சிரிச்சுக்கிட்டே எல்லா புருஷங்களும் இப்படித்தான் இருப்பாங்க ரசனை கெட்டவங்க.

அதுக்கு மீனா சொல்றாங்க அப்படியெல்லாம் இல்ல அக்கா என் புருஷன் நான் என்ன செஞ்சு கொடுத்தாலும் பாராட்டுவாரு இப்ப வரைக்கும் அப்படித்தான் இருக்கிறார் அப்படின்னு சொல்றாங்க. சரி அப்ப நீ இந்த தோசை செஞ்சு கொடு அவரு நீ கேட்காமலே அவரா  பாராட்டினா  அம்பது ரூபா பெட்டு வச்சுக்கலாம் அப்படின்னு சொல்றாங்க .மீனாவும் சரின்னு ஒத்துக்கிறாங்க. இப்ப வீட்ல மனோஜ் விஜய  கிட்ட கலர் கலரா டிரஸ் வாங்கிட்டு வந்தது பத்தி சொல்றாங்க .அம்மா ஜோசியர்  சொல்லி இருக்கிறார் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு கலர்ல டிரஸ் போடணும் . அந்த சட்ட தான் உனக்கு பாதுகாப்பா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காரு. இத பாத்துட்டு ரோகினிக்கு விஜயாவுக்கு அதிர்ச்சியா இருக்கு.

manoj, vijaya

என்னடா நீ லூசு ஆயிட்டியா அப்படின்னு விஜயா  கேக்குறாங்க.. இல்லம்மா ஏற்கனவே என் பொருளை எல்லாம் எடுத்து என்னை ஏமாத்திட்டாங்க.. எனக்கு பயமா இருக்கு அப்படின்னு சொல்றாரு. மீனா அண்ணாமலை கிட்ட உக்காருங்க சாப்பிடலாம்னு  சொல்றாங்க. முத்து எங்கமானு  கேக்குறாரு. அவரு கீழ கார் துடைச்சுட்டு இருக்காரு மாமான்னு சொல்றாங்க. தோசையை பார்த்துட்டு என்ன பச்சை கலர்ல இருக்கு . ஆந்திரா ஸ்பெஷல் தோசை மாமா அப்படின்னு சொல்றாங்க. அருமையா இருக்குமா அப்படின்னு சொல்லவும், விஜயா  வராங்க ஏய் என்னடி தோசை பச்சை கலர்ல இருக்கு என்ன பச்சை மிளகாய் அரைச்சு தோசை சுட்டு இருக்கியா ஒரேடியா என்னைய மேல அனுப்பலாம்னு பாத்திட்டியானு கேக்குறாங்க. அதுக்கு அண்ணாமலை சொல்றாரூ  இது பச்சைப்பயிறு தோசை .ம்ம் .. ஏதோ சாப்பிடற மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றாங்க .

ரவியும்  சுருதியும் சாப்பிட்டு சூப்பரா இருக்கு அண்ணி அப்படின்னு ரவி சொல்றாரு.  ஸ்ருதியும் சூப்பரா இருக்கு மீனா. ஆனா முத்து சாப்பிட உட்காருகிறார், ஃபோன் பேசிட்டே உட்கார்ந்தனால மீனாவ பாராட்டவே இல்ல. ஆனா மீனா எதிர் பார்த்துட்டே இருக்கா. சுருதி சொல்றாங்க அடுத்த டைம் நீங்க இது செய்யும் போது சொல்லுங்க நான் வீடியோ எடுக்கிறேன் அப்படின்னு.. முத்து அப்படியே சாப்பிட்டு மீனாவுக்கும் அண்ணாமலைக்கும் பாய் சொல்லிட்டு கிளம்பிடுகிறார்.. மீனா பார்த்துட்டு ஏமாந்து போயிடறாங்க என்னடா இவரு அப்படியே போயிட்டாரு எதுவுமே சொல்லாம அப்படின்னு. மனோஜ் ரோகினியும் ஷோரூம் ல இருக்கிறாங்க. க்ரிஷ்  ரோகினிக்கு கால் பண்றான் அம்மா நீங்க எப்ப வருவீங்கன்னு கேக்குறான்.

Rohini (1)

கிருஷ்  உன்னோட பிறந்தநாளுக்கு டிரஸ் சாக்லேட் கேக்  வாங்கிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. இப்ப மனோஜ் வராரு யாருகிட்ட வந்துருறேன்னு சொல்ற.. உடனே ரோகினி என்னோட கிளைன்ட் வீட்ல பர்த்டே பங்க்ஷன் இருக்குது மனோஜ்.. அப்படியா நீ மட்டும் நல்லா பங்க்சனுக்காக போற அப்படின்னு மனோஜ் சொல்றாரு. நீயும் போக வேண்டியது தானே நானா வேணான்னு சொல்றேன். அது இல்ல ரோகிணி கோவா போலாம்னு பிளான் பண்ணா அது முடியாமல் போச்சு இப்ப எனக்கு யாரை பார்த்தாலும் பயமா இருக்கு இந்த டைம்ல போயிட்டு வந்தா நல்லா இருக்குன்னு தோணுதுன்னு சொல்றாரு. சரி மனோஜ் நம்ம ஒரு நாள் பிளான் பண்ணுவோம் இப்ப நான் வெளியில் கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிடறாங்க இதோட இன்னைக்கு  எபிசோடு முடிந்தது.

நாளைக்கு ப்ரோமோலா  க்ரிஸ்க்கு ரோகினி கோட் சூட் எடுக்குறாங்க அதே கடைக்கு தான் விஜயா வந்திருக்காங்க. என்ன ரோகினி நீ என்ன பண்ற அப்படின்னு கேக்குறாங்.க அதுக்கு ரோகிணி சின்னதா பர்ச்சேஸ் பண்ணலாம்னு வந்த ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க. அந்த கடைக்காரங்க மேடம் இந்த டிரஸ் உங்க உங்க பையனுக்கு பிடிக்கும்னு நம்புறேன் கவுண்டர்ல குடுத்துடறேன் அப்படின்னு சொல்றாங்க. இதைக் கேட்ட விஜயா   என்ன சொல்ற அந்த ஆளு பையனா அப்படின்னு கேக்குறாங்க.. நாளைக்கு என்ன நடக்க போகுது.. ரோகினி சமாளித்து விடுவாரா .. இல்ல மாட்டிகொள்வரான்னு பார்க்கலாம்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்