ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே யார்?

Ismail Haniyeh

இஸ்மாயில் ஹனியே : தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டிருப்பது மத்திய கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது.

இந்த நிலையில், ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்த இஸ்மாயில், அங்கு அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கி படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ஏப்ரல் மாதம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவரது 3 மகன்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த இஸ்மாயில் ஹனியே ?

இஸ்மாயில் ஹனியே, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸுடன் தொடர்புடைய ஒரு பாலஸ்தீனிய அரசியல் தலைவர் ஆவார். ஜனவரி 29, 1963 -ல், காசா பகுதியில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமில் பிறந்த இஸ்மாயில், தனது நிறுவனத் திறன்கள் மற்றும் தலைமைத்துவத் திறன்களால் ஹமாஸில் முக்கிய புள்ளியாக மாறினார்.

கல்வி  :

இஸ்மாயில் ஹனியே, காசாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயின்றார், அங்கு அவர் அரபு இலக்கியத்தில் பட்டம் பெற்றார். 1980-களின் பிற்பகுதியில் நடந்த முதல் பாலஸ்தீனிய வன்முறை கலவரங்களின் போது, ஹமாஸுடன் தொடர்பு கொண்டார்.

ஹமாஸில் தலைமை :

இவர் ஹமாஸில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். முதலில் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஷேக் அகமது யாசினின் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் அவர் குழுவின் அரசியல் மற்றும் சமூக சேவைகளை ஒழுங்கமைப்பதில் முக்கிய நபராக உருவெடுத்தார்.

சிறைவாசம் :

1980கள் மற்றும் 1990களில் இஸ்ரேலிய சிறைகளில் பல தண்டனைகளை அனுபவித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 1992 இல் காசாவிலிருந்து லெபனானுக்கு நூற்றுக்கணக்கானவர்களுடன் நாடு கடத்தப்பட்டார், அதன்பின் காசாவுக்குத் திரும்பினார்.

பாலஸ்தீனிய பிரதம மந்திரி :

ஜனவரி 2006 இல் பாலஸ்தீனிய சட்டமன்றத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற பிறகு, ஹனியே பாலஸ்தீனிய அதிகாரத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இது அவரை மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது. ஆனால், அவரது பதவிக்காலம்  ஃபத்தாவின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரை மற்றும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு இடையே பிளவுக்கு வழிவகுத்தது.

காசாவில் பங்கு :

2007 ஆம் ஆண்டு ஹமாஸ் மற்றும் ஃபத்தா இடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, ஹனியே காசாவின் தலைவராக ஆனார். காசாவில் அவரது தலைமையானது, முற்றுகைகள், இஸ்ரேலுடனான இராணுவ மோதல்கள் மற்றும் அரசியல் சவால்கள் உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்