மக்களுக்கு இனிப்பான செய்தி …!இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55,1 லிட்டர் டீசல் ரூ.50-க்கு விற்பனை …!மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Default Image

எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .

Related image

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது. Image result for மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, பெட்ரோல் விலை உயர்வை தடுக்க மத்திய  பெட்ரோல் விலை பொதுமக்களுக்கு குறைவாக கிடைக்க எத்தனால் கலந்த பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.முதலாவதாக  5 ஆலைகளை பெட்ரோலியத்துறை அமைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் விற்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இதனால் இந்த விலை குறைந்த எத்தனால் பெட்ரோல் எப்போது வெளியாகும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய(செப்டம்பர் 11 ஆம் தேதி) பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ. 84.05 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 77.13 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்