70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்.! 3 பேர் கைது.!

Arrest

சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்கிருந்த்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை கிளாம்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

அவர் பெயர் பைசல் ரகுமான் என்பதும், அவரிடம் இருந்து 6 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், செங்குன்றம் பகுதியில் ஒரு குடோனில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு, 1 கிலோ அளவில் அதே மெத்தபெட்டமைன் பொருள் கைப்பற்றபட்டதாகவும், அங்கு மன்சூர், இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 7 கிலோ எடைகொண்ட மெத்தபெட்டமைன் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என் கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand