வாட்ஸ் ஆப்பில் மிரட்டிய” புல்லட்டை” போட்டு தாக்கிய போலிஸ்..!!!

Default Image

பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Image result for புல்லட் நாகராஜன்

கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி குரல் பதிவு வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ், தன்னை காவல்துறையால் பிடிக்க முடியாது என்று சவால் விட்டான். அவனை பிடிக்க தனிப்படை காவல துறையினர் அவனது செல்போன் நம்பர் மூலம் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

Image result for புல்லட் நாகராஜன்

வத்தலகுண்டுவில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து அவன் பெரியகுளம் செல்வதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளான் புல்லட் நாகராஜ்.

பந்த் காரணமாக அரசியல் கட்சியினர் திரண்டு சாலைமறியல் செய்ததால் தப்பிச்செல்ல இயலாமல் விழித்துக் கொண்டு இருந்த புல்லட் நாகராஜை பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்