குட்கா ஊழல்..!குடையும் சிபிஜ…!குழம்பும் அதிகாரிகள்..!குறிவைக்கும் அமைச்சர்கள் ..????

Default Image

குட்கா ஊழல் வழக்கில் புதுச்சேரியில் மாதவ ராவுக்கு சொந்தமான ரசாயன ஆலையில் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி திருபுவனையில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான சீனிவாசா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் மாதவ ராவுக்குச் சொந்தமான நிறுவன ஊழியர்கள் 6 பேரிடம் சென்னையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருபுவனையில் உள்ள சீனிவாசா கெமிக்கல்ஸ் என்ற சோப்பு ஆயில் தயாரிப்பு தொழிற்சாலையில் புதுச்சேரி போலீசார் ஆய்வு நடத்தினர்.

புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார், குட்கா விவகாரம் குறித்த முறைகேடுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றுள்ளதா என தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.சிபிஜ குடைந்து வரும் இந்த ஊழல் வழக்கில் குறிக்கவைக்கப்படும் அமைச்சர்களும் திணரி வருகின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்