100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்..!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது..!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் அகில இந்தியா காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.இந்த அழைப்பினை ஏற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் அனைத்தும், ஆதரவு தெரிவித்து இந்த பாரதபந்த்தில் இன்று கலந்துகொண்டனர்.
அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் காந்திசாலையில் இருந்து பேரணியாக வந்து மூங்கில் மண்டபம் பகுதியில் சாலைமறியல் மறியலில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
DINASUVADU