புதுக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த ரவுடி துரை சுட்டுக்கொலை.!

rowdy shot dead

ரவுடி துரைசாமி : புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருச்சி எம்.ஜி.ஆர் பகுதியை சேர்ந்த ரவுடி துரை மீது, கொலை, வழிப்பறி  உள்ளிட்ட உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு, துரை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்துள்ளனர்.

அதன்படி, அவர் புதுக்கோட்டை திருவரங்குன்றம் தைலமர காட்டுப் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்குச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று அவரை பிடிக்க காவல்துறையினர் முயற்சித்த போது, அவர் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது தற்காப்புக்காக சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்