10 ரூபாய் கேட்ட ரிக்ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

மும்பை : ரிக்ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை கடுமையாக ரிக்ஷா ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் திருநங்கை சென்று கொண்டிருந்தபோது ரிக்ஷா ஓட்டுநர் பணம் கேட்பது போல தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வேகமாக வந்த திருநங்கை ஓட்டுநர் கன்னத்தில் வேகமாக அடித்தார். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கீழே விழ சென்றார். திருநங்கை அடிக்க ஆரம்பித்ததால் வாக்குவாதம் முற்றியது. எனவே, ஓட்டுனர், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்று அவரும் தாக்குதலில் ஈடுபட்டார்.
அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சண்டையை தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் தங்களுடைய போனை வைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். சண்டை மிகவும் பெரிதான காரணத்தால் கோபத்தில் அந்த திருநங்கை தனது உடையை கிழித்துக்கொண்டு ஓட்டுனரை கடுமையாக தாக்கினார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒரு பெண் என்று சமூக வலைதளங்களில் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது, ஆனால், அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று சமூக வலைதளவாசிகள் கருத்துக் கூறி வருகின்றனர். இன்னும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய சரியான விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவம் மும்பையில் நடந்தது மட்டும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவருக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை . மேலும், இந்த செய்தியையும், வீடியோவையும் freepressjournal என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025