ஹத்ராஸ் விபத்து: உ.பி.யில் பறிபோன 121 உயிர்.. 6 பேர் அதிரடி கைது.!

Hadhras accident

உத்தரபிரதேசம் : ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு வீடு திரும்புகையில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் பெரும்பாலும் பெண்கள் தான், 31 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை உபி போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரில் நிகழ்வின் அமைப்பாளரும் ஒருவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவ்பிரகாஷ் மதுகர் என்பவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பலியான அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். அதன்படி, 21 உடல்கள் ஆக்ராவுக்கும், 28 எட்டாவுக்கும், 34 ஹத்ராஸுக்கும், 38 அலிகாருக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்