ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம்…!அமைச்சர் அன்பழகன் அதிரடி
ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது .ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபின் அமைச்சர் அன்பழகன் பேசுகையில் ,ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும். ராகிங்கை தடுக்க கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் ராகிங் கண்காணிப்புக்குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.