பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி ..!அதிமுக அரசு பயப்படாது …!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றனர் .காங்கிரஸ், பாஜகவின் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மத்திய அரசை தொடர்புகொண்டு ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.