பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.!

PM Modi

சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.

அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்வதாகவும் சொல்லப்பட்டது.

மேலும், பேசின் பாலத்தில் விபி பராமரிப்பு கிடங்குக்கு அடிக்கல் நாட்டும் மோடி, சென்னையில் உள்ள நெய்வேலி லிக்னைட்டில் ஒரு சில நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்