குவைத் தீ விபத்து.. தமிழர்களின் உயிரிழப்பு 7ஆக உயர்வு!

kuwait fire -tn

குவைத் : தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது 7ஆக அதிகரித்துள்ளதால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்றைய தினம் 2 தமிழர்கள் உயிரிழந்தாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை பாலியனோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்பொழுது, அந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதனால்,  கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த வீராசாமி, முகமது ஷரீப், ரிச்சர்ட் ராய், சிவசங்கர், சின்னதுரை, ராஜு எபினேசர், ராமு உட்பட மொத்தம் 49க்கும் மேற்பட்ட பலியாகியுள்ளனர்.

இதனிடையே, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்