இடைநிலை ஆசிரியர் தேர்வு தேதி மாற்றம் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.!

TNTET

தமிழகம்: இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் ஈடுபட 2 தேர்வுகளை கட்டாயமாக எழுத வேண்டும். அதில் முதல் தேர்வு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வாகும். இது தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் 2-வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு. இந்த ஆண்டில் வருகிற ஜூன் 23-ம் SGT  தேர்வானது நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த தேர்வை ஒத்திவைத்து உள்ளது.

அதன்படி, ஜூன்-23 அன்று நடைபெற இருந்த தேர்வானது தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வருகிற ஜூன்-27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றவாறு விண்ணப்பதிவர்கள் தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்