தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது.!

Default Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டம், 2024-ஆம் ஆண்டு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பின், தொடர்ந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் வெளிப்பாடாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் (40\40) வெற்றி கனியாக மாறியுள்ளது. இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்பொழுது அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 24ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்