மக்கள் நம்பிக்கையை நிறைவேற்றி நல்லாட்சி வழங்குங்க! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து!!

Default Image

நரேந்திர மோடி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற (பிரதமர் மோடி) உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்த முதல் தலைவர் நீங்கள் தான். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆட்சி அமைத்தீர்கள். மக்களவைத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் மூலம் நாட்டு மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பிரதமராக நீங்கள் செய்த பணி, உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அதன் மீது நீங்கள் வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவீர்கள். பொருளாதாரம், சமூக நீதி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என அனைத்து மக்களும் நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, நல்லாட்சி வழங்க, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்