”பாரத் பந்த் வணிகர் சங்கம் ஆதரவு”த.வெள்ளையன் அறிவிப்பு..!!

Default Image

இந்தியாவில் தொடந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டித்து வருகின்ற 10ம் தேதி தேசிய அளவிலான கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கிடு கிடுவென உயர்வதை கண்டித்து இந்த பந்த்தை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தற்போது மிக விரைவில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ.100 என்ற வரலாற்று உச்சத்தினை அடைந்துவிடும் என்ற நிலை நிலவி வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த போதும் மத்திய அரசு கலால் விதியை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

எனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 10-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தக்கு இந்தியளவில் பெருவாரியான கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தற்போது வணிகர் சங்கம் சார்பில் வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவிக்கும் என்று வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்