நடிகர் சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டம் – கேங்ஸ்டர் கும்பல் கைது.!

Default Image

சல்மான் கான் : சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 4 பேரை நவி மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பிரபல கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தனஞ்சய், வாஸ்பி கான், ரிஸ்வான் கான் மற்றும் கௌரவ் பாட்டியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள், மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் வைத்து சல்மான் கானின் கார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோய், சம்பத் நெஹ்ரா, கோல்டி ப்ரார் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கான் கார் மீது, தாக்குதல் நடத்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தான் முக்கிய ஆயுத சப்ளையர் மூலம் ஆயுதங்களை ஆர்டர் செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக நவி மும்பை போலீசார் தகவல் தெரிவித்துள்னர்.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி மும்பையின் பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு வெளியே, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு பிறகு, இந்த தாக்குதல் திட்டம் செயல்படுத்தவிருந்த நிலையில், போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்