தமிழக அரசிற்கு விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார் : மக்கள் இதற்க்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்…!!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . இவர் சமீப காலமாக பல பொது விழாக்களில் கலந்து கொண்டு மக்களுக்கு பலனுள்ள பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார்.
சென்னையில் விழிப்புணவுக்கான ” வரைபடங்கள் வழித்தடங்கள் ” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆவியாகி கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாளுக்கு இன்னும் குழந்தையாக தான் உள்ளார். அண்ணன் பேரறியாளனின் தாயின் போராட்டம் எனபது பெரிய தவம். ஆதலால் அந்த குழந்தையை தாயிடம் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.