தமிழக மீனவர்களுக்காக தொடர்ந்து பேச்சு வார்த்தை..!! அமைச்சர் ஜெயக்குமார்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்தியா – இலங்கை இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு இலங்கை முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 163 விசைப்படகுகள் விரைவில் மீட்கப்படும் என்று கூறிய அமைச்சர், மீட்க முடியாத படகுகளுக்கு மாற்று படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இரு நாட்டு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் தயாராக இருந்தும் இலங்கை அரசு முட்டுகட்டையாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment