சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

Savukku Shankar

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம்.

பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார்.

சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக திருச்சி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு இருந்தார். திருச்சியில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அவருக்கு நேற்று , ஒருநாள் போலீஸ் காவல் விதித்து நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு பிறப்பித்தார்.

இன்றுடன் ஒருநாள் காவல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திருச்சி நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.  இதனை அடுத்து, தற்போது திருச்சியில் இருந்து அவர் ஏற்கனவே இருந்த கோவை மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் தற்போது கொண்டு செல்லப்படுகிறார்.

இதே வழக்கில் கைதாகியுள்ள பெலிக்ஸிற்கு இன்று காலை கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்