யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

RedPix CEO Felix

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம்.

பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும் பேட்டி வீடியோவை வெளியிட்ட தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் மீது கோவை கிரைம் போலீசார், திருச்சி போலீசார், சென்னை, சேலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளன.

இதில், ஏற்கனவே சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஆகியோர் கோவை மற்றும் திருச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்த நிலையில், இன்று , யூ-டியூபர் பெலிக்ஸ் கோவையில் பதியப்பட்ட வழக்கின் விசாரணைக்காக கோவை அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 31ஆம் தேதி வரையில் தனியார் யூ-டியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து பெலிக்ஸ் தற்போது திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் திருச்சி போலீசாருக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்