அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

rain

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்தி வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், வரும் 20 -ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கூடலூ, விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு அண்ட் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்