மக்களுக்காக போராடும் தலைவன்! லீக்கான தளபதி 69 படத்தின் கதை?

thalapathy 69

சென்னை : விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்திற்கான கதை குறித்த விவரம் கசிந்துள்ளது.

நடிகர் விஜயின் 69-வது திரைப்படத்தினை தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக ஏற்கனவே, தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும், இன்னும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய் தற்போது “கோட்”  படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த “கோட்” படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த  படம் வெளியான பிறகு “தளபதி 69” படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், “தளபதி 69” படம் குறித்தும் அவ்வப்போது தகவல்களும் பரவி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போதும் சில லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்கும் இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே படத்தின் முழு கதையை எழுதி கொடுக்கும் வேலையாக கேரளாவில் இருக்கிறாராம். விரைவில் கதை முழுவதையும் எழுதி தயார் செய்துவிட்டு விஜயிடம் காமிக்கவும் இருக்கிறாராம். ஒரு தகவல் இது என்றால் மற்றோரு தகவல் தளபதி 69 படத்தின் கதை எப்படி பட்ட கதையை கொண்டது என்பது பற்றி தான்.

அதன்படி, தளபதி 69 படம் முழுக்க முழுக்க ஒரு சீரிஸ் ஆக செல்லும் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்படவுள்ளதாம். படத்தில் விஜய்  மக்களுக்காக போராடும் தலைவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம். அதாவது மக்களுடைய பிரச்னையை எடுத்துக்கூறி மக்களுக்காக போராடும் நிலையில், மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொள்கிறார்களாம். இப்படி தான் தளபதி 69 படத்தின் கதை களம் அமைந்துள்ளதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்