எனக்கும் கருணாநிதிக்கும் 48 ஆண்டுகளாக உறவு …! பிரணாப் முகர்ஜி உருக்கம்
சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பிரணாப் முகர்ஜி சென்றார்.அங்கு அவரை மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் கூறுகையில், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன்.கருணாநிதியுடன், தனக்கு 48 ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது, அவரது மறைவையொட்டி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.