தமிழக அரசு தாமதமின்றி இதை செய்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட வேண்டும் …!டி.டி.வி.தினகரன்
தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.பேரறிவாளன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் ஜெயலதாவின் விருப்பமுமாக இருந்தது. தமிழக அரசு தாமதமின்றி இதை செய்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.