இந்தியா-அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து …!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. ராணுவ கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்க விற்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது .இந்த கூட்டத்தில் இந்தியத் தரப்பில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் அமெரிக்க தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றனர்.