புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது !புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில் , புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எப்பொழுதும் செயல்படுத்தப்படாது. தமிழகத்தில் அமைந்தால் அதனை தமிழக அரசு கவனித்துக் கொள்ளும்.மேலும் அவசர காலத்தில் தேவைப்படும் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்கவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.