அடடே இரண்டு பீர் குடிச்சதுக்கு அப்புறம் தான் தைரியம் வந்துச்சாம்…!!! இது என்னடா புதுசா இருக்கு…!!!!

Default Image

இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான அலெஸ்டர் குக், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை சகா வீரர்களிடம் சொல்வதற்கான தைரியத்தை பெற்றது எப்படி என குக் விளக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுள்ளது. ஆனால் அந்த அணியின் சீனியர் வீரரான அலெஸ்டர் குக், இந்த தொடரில் சோபிக்கவில்லை. ஒரு இன்னிங்சில் கூட அவர் சரியாக ஆடவில்லை. 4 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஆடி, 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அண்மைகாலமாகவே குக் சரியாக ஆடவில்லை. பார்மில் இல்லாமல் தவித்த குக், ஒய்வு முடிவை அறிவித்துள்ளார்.

12 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஆடிய குக், இந்த முடிவை வீரர்களிடம் தெரிவித்தபோது அந்த இடமே உணர்ச்சிமயமானது. சகா வீரர்களிடம் ஒய்வு முடிவை தெரிவிக்கும் முன்பாக இரண்டு பீர்கள் குடித்தேன் அதன் பின்பு தான் அவர்களிடம் எனது ஒய்வு முடிவை சொல்ல முடிந்தது. அப்படியும் நான் அழுதேன். ஒருவேளை நான் பீர் குடிக்காமல் சொல்லியிருந்தால் கூடுதலாக அழுத்திருப்பேன் என குக் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்