அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

rain

Weather Update: அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்கத்தின் 4 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் மாலை 4 மணிக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்