தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை …!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியிட்ட அறிக்கையில் , சில தனியார் எம்எஸ்ஓ (MSO)-க்கள் ஒரு வாட்ஸ் அப் செய்தியை பொதுமக்களிடம் கேபிள் ஆபரேட்டர்கள் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த டிஜிட்டல் கம்பெனியின் செட்டாப் பாக்சையும் கொடுத்து தங்களது செட்டாப் பாக்ஸை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான செட்டாப் பாக்ஸ்களை , வேறொரு தனியார் நிறுவனத்திற்க்காக மாற்றிக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது , கிரிமினல் குற்றமாகும். இச்செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.