மோகன்லாலுக்கு பிரதமர் பாராட்டு…!!!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ராணுவத்தின் மதிப்பை உயர்த்தும் பல படங்களில் நடித்ததால் அவருக்கு கவுரவ ராணுவ தளபதி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது : நடிகர் மோகன்லாலுக்கு நடந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. பல்வேறு தளங்களில் அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டுக்குரியவை. அவை மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கின்றன. என்று தெரிவித்துள்ளனர்.