சினிமாவில் சிவகார்த்திக்கேயன் சம்பாதித்தது என்ன ?

Default Image

சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகி விட்டவர் சிவகார்த்திக்கேயன். இவருடன் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சூரி. இவர் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அப்போது அந்த கோயிலில் உள்ள பூசாரி, சூரியை அடையாளம் கண்டு கொண்டவர் நலம் விசாரித்திருக்கிறார்.

அதையடுத்து, சிவகார்த்திக்கேயன் எப்படி இருக்கிறார் என்று கேட்டவர் அவருக்கு விபூதி பொருட்கள் அடங்கிய பிரசாதம் பார்சலை கொடுத்து, இதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாராம்.

இந்த தகவலை சீமாராஜா படத்தின் ட்ரைலெர் விழாவில் சொன்ன, சூரி என்னை நேரில் பார்த்தல் என்னிடம் அந்த பூசாரி நலம் விசாரித்தார். ஆனால் அங்கு வராத சிவகார்த்திகேயனை நலம் விசாரித்ததோடு பிரசாதமும் கொடுத்து விடுகிறார். அந்த அளவுக்கு சினிமா மூலம் மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்