BREAKING NEWS: குட்கா முறைகேடு…!அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை…!

Default Image

குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக  முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை என்று தெரியவந்துள்ளது.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை என்று தகவல்  தெரியவந்துள்ளது.

குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்  தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ அதிகாரிகள் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்  சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* டெல்லியில் இருந்து சி.பி.ஐ. மூத்த அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்