பணத்துக்கே கஷ்டம்! சொத்துக்களை விற்க முடிவெடுத்த கே.பாலசந்தர்! ரஜினிகாந்த் செஞ்ச விஷயம்?

k balachander rajinikanth

K.Balachander இயக்குனர் கே.பாலசந்தர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் என்றுமே காலத்தால் அழியாது என்றே சொல்லலாம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு பேருக்கும் கே.பாலசந்தர்  பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தை வைத்து அபூர்வ ராகங்கள், தில்லு முல்லு, தப்பு தாளங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

முன்னணி இயக்குனராக இருந்தவரை இயக்குனர் கே.பாலசந்தருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், வயதான பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் முழுவதுமாக குறையை தொடங்கியது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட அவருக்கு 80 வயதான சமயத்தில் எல்லாம் ரொம்பவே சிரமத்தை சந்தித்தாராம்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

பட வாய்ப்புகள் வராமல் பணம் ரீதியாக அவருக்கு கஷ்டம் ஏற்பட்டதாம். அந்த சமயம் பணம் ரீதியாக கஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் இயக்குனர் கே.பாலசந்தர்  தனது சொத்துக்களையே விற்க முடிவு செய்துவிட்டாராம். அப்படி யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்த விஷயம் இயக்குனர் கே.பாலசந்தருக்கு தெரிய வந்ததாம். தெரிந்தவுடன் உடனடியாக கலைப்புலி தாணு நடிகர் ரஜினிகாந்திடம் தகவலை தெரியப்படுத்தினாராம்.

read more – பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே! 

உங்களுடைய குருநாதர் இப்படி பணம் இல்லாமல் சொத்துக்களை விற்க போகிறார் என்று கூறினாராம். உடனடியாக இயக்குனர் கே.பாலசந்தர்  தயாரிப்பில் உருவான குசேலன் திரைப்படத்தில் தான் ஒரு காதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தில் தான்  நடித்தால் நல்ல வசூல் வரும் என்று இயக்குனர் கே.பாலசந்தருக்காக ரஜினிகாந்த் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இந்த தகவலை கலைப்புலி தாணுவே தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்