ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.!

Nayab singh saini meet Haryan governor

Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள்  7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர்.

Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து அமைத்தனர். ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் கூட்டணி கட்சியான JJP கட்சி தனது ஆதரவை பின்வாங்கியது.

Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

இதனை அடுத்து ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா (JJP)  மற்ற அமைச்சர்கள் பொறுப்பில் இருந்தும் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்த்தனர். இதனை அடுத்து ஹரியானா மாநில புதிய முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது.

Read More – பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி.? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

தற்போது, பாஜக எம்ஏஏக்கள் , சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இந்த முறை முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி பாஜக எம்எல்ஏக்கள் உடன், நயாப் சிங் சைனி ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்