தூத்துக்குடியில் சோபியாவை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம்…!

Default Image

தூத்துக்குடியில்  சோபியாவை  உடனடியாக விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.

பின்  விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் சோபியாவை  உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், சோபியாவின் தந்தை சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்ய வலியுறுத்திம்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்