முதல்வரை கண்டித்து இப்படியும் போராட்டம் நடத்தலாம்..ஊருக்கே வழிகாட்டும் விவசாயிகள்..!!

Default Image

விவசாயிகளின் பிரச்சனைகளை போக்காமல் பேட்மிட்டன் விளையாடும் தமிழக முதல்வரை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் ,

தஞ்சாவூர் ,

இன்று மேட்டூர் அணை நீர் கடைமடைக்கு வந்து சேராத நிலையில், தமிழக முதல்வர் பேட்மிண்டன் விளையாடுவதையும், பாராட்டு கூட்டம் நடத்துவதையும் கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் பேட்மிட்டன் விளையாடி நூதன முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் கடைமடைக்கு நீர் வந்துசேரவில்லை காரணம் அரசாங்கம் முறையாக தூர்வாரி விவசயத்துறையின் சீரழிவை தீர்க்காததோடு விளைவு என்று  விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.இந்த அரசாங்கம் விவசாயிகளின் கஷ்டம் குறித்து கவலை படவில்லை, விவசாயிகள் குறித்து இந்த அரசாங்கத்திற்கு கவலை இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து தமிழக முதல்வர் விவசாயிகளை புறக்கணித்து வருகின்றார் என்ற அவர் விவசாயிகளிடம் பேசாமல் ஜீம் சென்று உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு என மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றார்.அது மட்டும் இல்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மன்னார்குடியில் பாராட்டு விழா நடத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.கடைமடையை பகுதியை  பார்வையிடாமல் பேட்மிட்டன் விளையாடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளும் பேட்மிட்டன் விளையாடி நூதன முறையில் கண்டனத்தை பதிவு செய்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்