கரகாட்டக்காரன் படம் நான் பண்ண வேண்டியது! நடிகை நிரோஷா வேதனை!

niroshaKarakattakkaran

பொதுவாகவே சினிமா திரையில் இருக்கும் பல நடிகர்கள் நடிகைகள் எதாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு விட்டு அந்த படங்கள் வெளியாகி ஹிட் ஆன பிறகு இந்த படத்தில் நாம் நடித்திருக்கலாம் என்று யோசித்து வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் நடிகை நிரோஷா ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது வருத்தப்பட்டுள்ளார். . நிரோஷா வேறு யாரும் இல்லை நடிகை ராதிகாவின் தங்கை மற்றும் நடிகர் ராம்கியின் மனைவி தான்.

இவர் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வளர்ந்து வந்தார்.  அதன்பின் திருமணம் முடிந்த பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என்றே சொல்லலாம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரோஷா ரஜினிகாந்திற்கு ஜோடியாக லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அப்பவே அப்படி! பரத நாட்டியத்தில் பின்னி எடுக்கும் ஸ்ரீ லீலா…வைரலாகும் வீடியோ!

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை முன்னிட்டு பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிரோஷா தான் தவறவிட்ட படங்களை குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நான் தான் முதலில் நடிக்கவேண்டியது.

ஆனால், நான் அந்த சமயம் வேறு படங்களில் நடித்து கொண்டிருந்த காரணத்தால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போயிட்டது. இயக்குனர் கங்கை அமரன் சார் எவ்வளவோ என்னிடம் கேட்டார் கொஞ்சம் தேதி கொடுங்கள் என்று ஆனால், நான் வேறு படங்களில் நடித்து கொண்டிருந்த ஒரே காரணத்தால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது” என வேதனையுடன் நிரோஷா  கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்